கழிப்பறையில் கூட ஊழல் செய்யும் திருட்டு மாடல் அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
Jul 31, 2025, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழிப்பறையில் கூட ஊழல் செய்யும் திருட்டு மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு மாடல் அரசின் அராஜகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை மாநகராட்சியின் 1,260 இடங்களில் உள்ள 10,000 பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 620 கோடியும், ராயபுரம் மற்றும் திரு.வி.க ஆகிய இரண்டு மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளைத் தனியார்மயமாக்குதற்கு ரூ. 430 கோடியும் என திமுக ஆட்சியில் இதுவரை சுமார் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக உள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஜனவரி 2022-இல் ரூ. 3.18 ஆக இருந்த ஒரு பொது கழிப்பறையின் பராமரிப்பு செலவானது செப்டம்பர் 2022-இல் ரூ.363.9 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள ரூ. 360.72 எங்கே செல்கிறது?

தற்போதுள்ள முக்கால்வாசி பொதுக் கழிப்பறைகள் தண்ணீர், கதவு, தாழ்ப்பாள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தரையெல்லாம் கறைபடிந்து துர்நாற்றம் வீசுகின்றன என்பது திமுக அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2023-இல் மகளிர் நலனுக்காக ரூ. 4.5 கோடி நிதி செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட “she toilets” என்ற நடமாடும் மகளிர் கழிப்பறைகள் ஒரு வருடத்திற்குள் காணாமல் போய் விட்ட நிலையில், மீதமிருக்கும் கழிப்பறைகளும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கிடப்பது மிகப்பெரும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி அலங்கோலமாகக் காட்சியளிக்கும் கழிப்பறைகளைப் பராமரிக்க ஆயிரம் கோடி செலவானது என அரசு கணக்கு காட்டுவது யார் காதில் பூ சுற்றுவதற்காக? இவர்கள் கொள்ளையடிக்கும் மக்கள் பணம் யாருக்கு செல்கிறது, எங்கே செல்கிறது? என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊழல் முறைகேடுகளுக்குப் பெயர் போன திமுக, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் கழிப்பறையிலும் கொள்ளையடித்து கஜானாவை நிரப்பிக் கொள்ள துணிந்துள்ளது அருவருக்கத்தக்கது. இந்த ஆட்சியை அரியணையில் இருந்து அகற்றினால் மட்டுமே தமிழகம் புத்துணர்வு பெறும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: privatization of public toiletsSwachh Bharat MissionDMK regimeBJP state president Nainar Nagendranpublic toilets issue
ShareTweetSendShare
Previous Post

வாணியம்பாடி அருகே மாமியாரை தாக்கிய மருமகள் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

Next Post

சீர்காழி அருகே உறவினர்கள் இடையே மோதல் : ஒருவர் கொலை!

Related News

சென்னை கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு – 3 பேருக்கு நீதிமன்ற காவல்!

நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுகிறது – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு சதிச் செயலே காரணம் – விசாரணையில் அம்பலம்!

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் – குஷ்பு பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

பாக். தீவிரவாதிகள் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? – அமித் ஷா கேள்வி!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் – மிரட்டிய சுனாமி – மிரட்சியில் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies