சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின், ஈவெரா, அண்ணா, கருணாநிதியின் புகைப்படங்களையும், திமுக உறுப்பினர் அட்டைகளையும் சாலையில் தூக்கி வீசி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.