தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி தனது கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியை இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மாநிலக் கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை முழுவீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி பிரம்மாண்ட கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது.
தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு குழுவினரின் பயணம் சென்னையிலிருந்து இன்று துவங்கியது.
முதல் நாளான இன்று காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட பின்பு மக்களின் கருத்துக்களைத் தொகுத்து வழங்கி பிரம்மாண்ட கருத்துக்கணிப்பாகத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி வெளியிட உள்ளது.