தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரியும் அதிமுக உறுப்பினர் எனக் கூறப்படும் சூர்யமூர்த்தி என்பவர் சார்பில், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நிராகக்கரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.