பெரு நாட்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கிய தைவான் நாட்டுக் கப்பலில் இருந்து 50 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன.
பெருவின் கல்லோவ் விரிகுடா கடலில் தைவான் நாட்டின் எவர்கிரீன் கப்பல் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் கப்பலில் இருந்த 50க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கடலில் விழுந்து சேதமடைந்தன. கண்டெய்னர்களை மீட்கும் பணி 20 நாட்கள் வரை தொடரும் எனக் கூறப்படுகிறது.