பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் "ரியோ டாட்சுகி"!
Sep 20, 2025, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 09:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நிலநடுக்கத்தை முன்பே ஒருவர் கணித்துக் கூறியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார்? அவர் கூறிய ஆருடங்கள் என்னென்ன? என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஜூலை 31ஆம் தேதி ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 8.8ஆக பதிவானது. 6 அல்லது 7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலே, அது பலத்த பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இந்நிலையில், 8.8 என்ற அளவில் அதிர்வு ஏற்பட்டதால் அதன் பாதிப்புகளை விவரிக்கத் தேவையில்லை. வரலாற்றில் இதுவரை பதிவான 10 மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக இதனை, அமெரிக்கப் புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால், கிழக்கு ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. ரஷ்யாவிற்குச் சொந்தமான குரில் தீவுகளில் கடல்நீர் உட்புகுந்து கட்டடங்களைச் சூழ்ந்தது. அதேபோல், ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் உள்ள துறைமுகங்களும் சேதமடைந்தன. 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகளும் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் மேலும் அதிகரித்தது.

இப்படிப் பல பாதிப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் பற்றி, ரியோ டாட்சுகி என்ற காமிக்ஸ் எழுத்தாளர் முன்பே கணித்துக் கூறியிருந்ததுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இவர் இதற்கும் முன்பும் இதேபோன்ற பல தீர்க்கதரிசனங்களைக் கூறியுள்ளார்.

காமிக்ஸ் எழுத்தாளரான ரியோ டாட்சுகி , 1999ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். நான் கண்ட எதிர்காலம் என்பது அதன் தலைப்பு. அந்த புத்தகத்தில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் எனக் கூறியிருந்தார். அதன்படியே, அந்தாண்டு, ஜப்பானின் வடக்கு டோஹோகு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு “முழுமையான பதிப்பு” என்ற பெயரில் மற்றொரு புத்தகத்தை அவர் வெளியிட்டார். அதில்தான், அண்மையில் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து ஆருடம் கூறப்பட்டிருந்தது. 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்படும் என ரியோ டாட்சுகி அதில் கூறியிருந்தார்.

இதனை அறிந்த பல மக்கள் குறிப்பிட்ட அந்த மாதத்தில் ஜப்பானுக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்கத் தொடங்கினார். மக்களின் அச்சத்தைப் போக்க, நிலநடுக்கம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது.

ஆனால், ரியோ டாட்சுகி கணித்தது போலவே நடந்தது. ரஷ்யா மற்றும் ஜப்பானில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, ரியோ டாட்சுகி என்பவர் குறித்தும், அவரது ஆருடங்கள் குறித்தும் இணையத்தில் பலர் தேடி வருகின்றனர். மேலும், நாஸ்ட்ரடாமஸ், பாபா வங்கா உள்ளிட்ட தீர்க்கதரிசிகளின் வரிசையில் ரியோ டாட்சுகியை வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.

Tags: Comics writer who predicted disasters: "Ryo Tatsuki" celebrated as the modern Nostradamus"ரியோ டாட்சுகிநவீன நாஸ்ட்ரடாமஸ்Modern Nostradamus
ShareTweetSendShare
Previous Post

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

Next Post

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் – மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

பிரான்ஸ் அதிபரின் மனைவி திருநங்கையா? : விமர்சனங்களுக்கு பதிலடி – சட்டப் போராட்டத்தில் இறங்கிய மேக்ரான்!

MADE IN INDIA-க்கு வரவேற்பு : ஐ-போன் 17 மாடலை வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

டெல்லி பல்கலை. தேர்தல்- ஏபிவிபி வெற்றி!

நடிகர் ரோபோ சங்கர் உடல் நல்லடக்கம்!

பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெட்டவெளிச்சம்!

நாட்டை விட்டு தப்பிக்கும் நிலை ராகுலுக்கு ஏற்படும் – கங்கனா ரனாவத் எச்சரிக்கை!

பானு முஷ்டாக்கிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடர்பு உலகமே அறியும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies