பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் "ரியோ டாட்சுகி"!
Jun 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 09:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நிலநடுக்கத்தை முன்பே ஒருவர் கணித்துக் கூறியிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார்? அவர் கூறிய ஆருடங்கள் என்னென்ன? என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஜூலை 31ஆம் தேதி ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 8.8ஆக பதிவானது. 6 அல்லது 7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலே, அது பலத்த பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இந்நிலையில், 8.8 என்ற அளவில் அதிர்வு ஏற்பட்டதால் அதன் பாதிப்புகளை விவரிக்கத் தேவையில்லை. வரலாற்றில் இதுவரை பதிவான 10 மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக இதனை, அமெரிக்கப் புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால், கிழக்கு ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. ரஷ்யாவிற்குச் சொந்தமான குரில் தீவுகளில் கடல்நீர் உட்புகுந்து கட்டடங்களைச் சூழ்ந்தது. அதேபோல், ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் உள்ள துறைமுகங்களும் சேதமடைந்தன. 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகளும் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் மேலும் அதிகரித்தது.

இப்படிப் பல பாதிப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் பற்றி, ரியோ டாட்சுகி என்ற காமிக்ஸ் எழுத்தாளர் முன்பே கணித்துக் கூறியிருந்ததுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இவர் இதற்கும் முன்பும் இதேபோன்ற பல தீர்க்கதரிசனங்களைக் கூறியுள்ளார்.

காமிக்ஸ் எழுத்தாளரான ரியோ டாட்சுகி , 1999ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். நான் கண்ட எதிர்காலம் என்பது அதன் தலைப்பு. அந்த புத்தகத்தில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் எனக் கூறியிருந்தார். அதன்படியே, அந்தாண்டு, ஜப்பானின் வடக்கு டோஹோகு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு “முழுமையான பதிப்பு” என்ற பெயரில் மற்றொரு புத்தகத்தை அவர் வெளியிட்டார். அதில்தான், அண்மையில் ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து ஆருடம் கூறப்பட்டிருந்தது. 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்படும் என ரியோ டாட்சுகி அதில் கூறியிருந்தார்.

இதனை அறிந்த பல மக்கள் குறிப்பிட்ட அந்த மாதத்தில் ஜப்பானுக்குச் சுற்றுலா செல்வதைத் தவிர்க்கத் தொடங்கினார். மக்களின் அச்சத்தைப் போக்க, நிலநடுக்கம் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது.

ஆனால், ரியோ டாட்சுகி கணித்தது போலவே நடந்தது. ரஷ்யா மற்றும் ஜப்பானில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, ரியோ டாட்சுகி என்பவர் குறித்தும், அவரது ஆருடங்கள் குறித்தும் இணையத்தில் பலர் தேடி வருகின்றனர். மேலும், நாஸ்ட்ரடாமஸ், பாபா வங்கா உள்ளிட்ட தீர்க்கதரிசிகளின் வரிசையில் ரியோ டாட்சுகியை வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.

Tags: Comics writer who predicted disasters: "Ryo Tatsuki" celebrated as the modern Nostradamus"ரியோ டாட்சுகிநவீன நாஸ்ட்ரடாமஸ்Modern Nostradamus
ShareTweetSendShare
Previous Post

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

Next Post

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies