ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சிபு சோரன் 38 ஆண்டுகளுக்கு மேலாக அக்கட்சியின் தலைவராக இருந்துள்ளார்.
மேலும் ஜார்க்கண்டின் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
81 வயதான ஷிபு சோரனுக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த ஜூன் 24ம் தேதி டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். சிபு சோரன் மறைவுக்குத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.