மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக மாணவர்களை மரத்தடியில் அமர வைத்ததை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்புதூரில் உள்ள அரசு பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பள்ளி இயங்கும் சூழலில், நடைபெற்ற இந்த முகாமால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவலநிலை ஏற்பட்டது.
இதையறிந்த அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முகாமிற்கு ஆதரவாக பள்ளி நிர்வாகத்தினர் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையால் நகர்மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டுகலைந்து சென்றனர். மேலும் மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.