மியான்மரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மியான்மாரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள லைசா நகரில் கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், ஏராளமான குடியிருப்புகள் வெள்ளநீரில் மூழ்கின. இந்த வெள்ளப்பெருக்கால் 6 பேர் உயிரிழந்ததாக ஆயுத குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.