உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு - காரணம் - தீர்வு என்ன?
Sep 24, 2025, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

Web Desk by Web Desk
Aug 8, 2025, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன?, எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க விஞ்ஞானிகள் கூறும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காட்சிகள் இவை. கீர்கங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், வீடுகள், கடைகள், கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அடித்துச் சென்றது. இதனால், நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தாராலி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ராணுவ வீரர்களும் மாயமாகினர். திடீர் நிலச்சரிவால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இமயமலை பகுதியில் இது போன்ற நிலச்சரிவு ஏற்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல.

2013ஆம் ஆண்டு கேதார்நாத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 5,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1970ஆம் ஆண்டு உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஏற்பட்ட இதேபோன்ற நிலச்சரிவால், பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

2011ஆம் ஆண்டு ரிஷிகங்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், தபோவன் அணை இடிந்தது. இது 200 பேரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது. இப்படி, இமய மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய நிலச்சரிவுகள், Glacial Lake Outburst Flood மற்றும் Low Level Overflow என அழைக்கப்படுகிறது.

மலைப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி நீராக வழிந்தோடி ஓரிடத்தில் ஏரி போலத் தேங்குகின்றன. சில நேரங்களில இத்தகைய ஏரிகளின் கரையில் உடைப்பு ஏற்படுவதால், ஒரே நேரத்தில் அதிகப்படியான நீர் கீழ்நோக்கி பாய்கிறது. இது, Glacial Lake Outburst Flood என அழைக்கப்படுகிறது. மாறாக, அத்தகைய ஏரிகளில் இருந்து படிப்படியாகக் குறைந்த அளவில் தண்ணீர் வெளியேறுவது Low Level Overflow எனக் குறிப்பிடப்படுகிறது.

இமய மலைப்பகுதிகளில் ஏற்படும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இவைதான் முக்கிய காரணமாக உள்ளன.  இமயமலையில் உள்ள பனி ஏரிகள் இத்தகைய முறைகளில் மீண்டும் உடைய வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

2050ஆம் ஆண்டில் 30 முதல் 40 சதவீதம் வரையிலான பனிப்பாறைகள் உருகும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், Glacial Lake Outburst Flood  மற்றும் Low Level Overflow-வால் ஏற்படும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயரும் எனக் கூறப்படுகிறது. அப்படி ஏற்பட்டால், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பிலான பகுதிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.

இதனைத் தடுக்க, மலைகளில் உள்ள பனி ஏரிகளைச் செயற்கைக்கோள்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்தப்படி இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் வீடுகள், கட்டடங்கள் கட்டப்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், இயற்கை வடிகால் அமைப்புகளை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இப்போது இருந்தே இதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கினால், எதிர்காலத்தில் இத்தகைய சேதங்கள் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Tags: upNEWS TODAYThe landslide that overturned Uttarakashi - what is the cause - what is the solution?உத்தரகாசி நிலச்சரிவுland silde
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாசி நிலச்சரிவு : 44 பேர் மீட்பு!

Next Post

தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

Related News

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 : 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்கள் விற்பனை!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

Load More

அண்மைச் செய்திகள்

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி ஆகியோர் தேசிய விருது பெற்றனர்!

சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்!

அமெரிக்கா ஐசிசி-ஐ பொருளாதார தடைகளால் தாக்கக்கூடும்!

தெலங்கானா : அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் துணிகர கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies