சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பட்டா வழங்க விவசாயியிடம், கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெரும் வீடியோ வெளியாகியுள்ளது.
ராமி ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் ,தனது தாத்தா பெயரில் உள்ள பூர்வீக சொத்தின் ஒரு பகுதியைத் தனது தந்தையின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்.
இதற்குப் பட்டா வழங்குவதற்குக் கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.