முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!
Sep 24, 2025, 09:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்வேறு காரணங்களால் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வது வழக்கம். ஆனால், மொத்த நாடே ஒட்டுமொத்தமாக வேறு பகுதிக்கு இடம் பெயரும் நிகழ்வு ஆஸ்திரேலியா அருகே நிகழ்ந்து வருகிறது. என்ன காரணம்? விரிவாகப் பார்க்கலாம்.

நான்கு புறமும் கடல். எங்கும் பசுமை. நீண்டு வளர்ந்த தென்னை மரங்கள். தூய்மையான சாலைகள். நீலநிற கடற்கரை. இப்படி, பார்ப்பதற்கே கொள்ளை அழகாக உள்ளதல்லவா. இந்த நிலப்பரப்புதான் இன்னும் சில ஆண்டுகளில், இருந்த தடயமே இல்லாமல் காணாமல் போகப் போகிறது.

இந்த சிறிய நிலப்பரப்பு ஒரு நாடு. பெயர் துவாலு. சுமார் 11 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த நாடு, வெறும் 25 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவு கொண்டுள்ளது. இதன் காரணமாக உலகின் மிகச்சிறிய நாடுகளின் பட்டியலில் துவாலு 4ஆவது இடத்தில் உள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்த தீவு நாடு, 9 பவளத்தீவுகளை உள்ளடக்கியது.

நான்கு புறமும் சூழ்ந்து இந்த நாட்டிற்கு எழில் சேர்க்கும் இந்த கடற்பரப்புதான், இந்த நாட்டிற்கு எமனாகவும் மாறியுள்ளது. காரணம், கடல் மட்டத்தில் இருந்து வெறும் 2 மீட்டர் உயரத்தில்தான் துவாலு அமைந்துள்ளது. இதன் காரணமாகத் தொடர்ந்து கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகிறது. இப்படியே சென்றால், மொத்த நாடே கடலுக்கு அடியில் சென்றுவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடல் அரிப்பிலிருந்தும், கடல்நீர் மட்டம் உயர்வதில் இருந்தும் தப்பிக்க துவாலு நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, நாட்டையே ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டுப் பாதுகாப்பான வேறு இடத்திற்குக் கிளம்பிச் செல்வது.

பல நாடுகள் கடலுக்கு அடியில் சென்றதை வரலாற்றில் படித்துள்ளோம். லெமுரியா என்ற ஒரு கண்டமே கடலில் மூழ்கியதாகக் கேள்விப்பட்டுள்ளோம். இவற்றிற்கு எல்லாம் நிகழ்கால உதாரணமாக உள்ளது துவாலா. நிதர்சனத்தை உணர்ந்து கொண்ட அந்நாட்டு மக்கள், வேறு பகுதிகளுக்குக் குடிபெயரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மக்களுக்குக் குடிபெயர்வுக்கான முதல் தேர்வாக ஆஸ்திரேலியா விளங்கி வருகிறது. ஏனென்றால் துவாலுக்கு அருகே உள்ள மிகப்பெரிய நாடு அதுதான்.

மறுபுறம், துவாலு மக்களுக்கு ஆஸ்திரேலிய அரசும் நேசக்கரம் நீட்டி வருகிறது. மேலும், ஆண்டுதோறும் 280 துவாலு மக்களுக்கு நிரந்தர வாழ்விடம் வழங்கும் வகையில், 2023ஆம் ஆண்டு தனி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.

துவாலு மட்டுமல்ல பல்வேறு நாடுகள் கடல் நீர்மட்டம் உயர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நாடுகளைப் பாதுகாக்கச் சர்வதேச அளவில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள, துவாலு நாட்டின் பிரதமர் ஃபெலெட்டி தியோ வலியுறுத்தி வருகிறார்.

ஏனென்றால், ஒரு நாடு அழியும்போது, வெறும் நிலப்பரப்பு மட்டும் அழிவதில்லை. அதன் தனித்துவம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்று எச்சங்கள் உள்ளிட்டவையும்தான் சேர்ந்து அழிகின்றன.

Tags: NEWS TODAYஆஸ்திரேலியாA country that will completely disappear: People who will evacuate the entire countryநாட்டையே காலி செய்யும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

Next Post

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

Related News

குப்பை நகரமாகும் “ஐடி ஹப் சிட்டி” : மாநில அரசு மீது அதிருப்தியில் பெங்ளூருவாசிகள்

H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!

மருத்துவ உலகில் சூட்டை கிளப்பிய டிரம்பின் கூற்று : TYLENOL மருந்தால் ஆட்டிசம் பாதிப்பா?

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – குவியும் ஆர்டர்கள், குஷியில் தொழிலாளர்கள்!

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் ஆஸ்பிரின்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் அனைத்துத் தரப்பினருக்கும் பலன் – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

அர்ஜென்டினாவில் வாயில் முதலை எலும்புடன் கூடிய புதிய டைனோசர் கண்டுபிடிப்பு!

உத்தரப் பிரதேசம் : மாவட்ட கல்வி அலுவலரை பெல்டால் தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்!

சீமானும் விஜயலட்சுமியும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை : வணிக வளாகங்களுக்கு சென்ற நயினார் நாகேந்திரன்!

நெல்லை – சென்னை வந்தே பாரத் 20 பெட்டியுடன் இன்று முதல் சேவை துவக்கம்!

மேற்குவங்கம் : தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்!

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐசிசி!

உத்தரப் பிரதேசம் : மலைப் பாம்பிடம் சிக்கி தவித்த பாம்பு பிடி வீரர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies