மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? - அண்ணாமலை கேள்வி!
Aug 8, 2025, 09:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது குறித்த சிறப்புத் திட்டங்கள் ஒன்றும் இல்லை, வேறு எதற்காக இந்தக் கல்விக் கொள்கை என்ற வெற்று அறிவிப்பு?  என்று  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை  கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ்த் திரைப்படமான தூள் திரைப்படத்தில், “ராத்திரி பூரா இதைத்தான் ஒட்டிட்டு இருந்தியா” என்றொரு ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையைப் பார்த்தால், அந்த நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது, தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டு, அதில் உள்ள அத்தனை சிறப்பு அம்சங்களையும் அப்படியே பெயர் மாற்றி, மாநிலக் கல்விக் கொள்கை என்று அறிவித்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு இன்று வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள தேசியக் கல்விக் கொள்கை 2020ன் சில சிறப்பு அம்சங்களை இங்கே குறிப்பிடுகிறோம். எதற்காக நான்கு ஆண்டுகளாக திமுக அரசு இதன் பெயரால் மக்களின் வரிப்பணத்தை வீணடித்தது என்பதற்குப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இப்படி, முழுக்க முழுக்க தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்களை, மாநிலக் கல்விக் கொள்கை என்ற பெயரில் அறிவிப்பதால் என்ன சாதிக்கப் போகிறார் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக ஆட்சியின் மிக முக்கிய நாடகங்களில் ஒன்று பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, ஆசிரியப் பெருமக்களுக்கான ஊதியம் வழங்க வேண்டிய நிதியை விட சிறிது அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து விட்டு, பாருங்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கியுள்ளோம் என்று பெருமை பேசிக் கொள்வார்கள். ஆனால், பள்ளிகளின் உட்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டார்கள். இதன் விளைவுதான், தமிழகம் முழுவதும், அரசுப் பள்ளிகள் கட்டிடங்கள் இல்லாமல், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிப்பதும், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுவதும் தினசரிச் செய்தி ஆகியிருக்கின்றன என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்துக்கு ₹1,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம், கணினி ஆய்வகங்கள் மேம்படுத்த ₹160 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம் என்று வெற்று அறிவிப்புகளை மீண்டும் வெளியிட்டுளார்கள். அப்படி எத்தனை பள்ளிக் கட்டிடங்கள் எந்தெந்த மாவட்டங்களில் கட்டியிருக்கிறீர்கள் என்றும், கணினி ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி என்ன ஆனது என்றும், ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு இன்று வரை பதில் இல்லை என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிக் கல்வி தொடர்பான மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தமிழகம் பல்வேறு பிரிவுகளில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இவற்றை எல்லாம் எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்ற படிநிலைகள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல், பெயருக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு, பொதுமக்களை ஏமாற்ற முயற்சித்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அளவில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையின்படி, தமிழகம் பத்தாவது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என சமீபத்தில் வெளியான மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், திமுக அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது குறித்த சிறப்புத் திட்டங்கள் ஒன்றும் இல்லை, வேறு எதற்காக இந்தக் கல்விக் கொள்கை என்ற வெற்று அறிவிப்பு? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக விளம்பர நாடகமாடிக் கொண்டிருந்து விட்டு, ஆட்சியின் கடைசி ஆண்டில் குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேசியக் கல்விக் கொள்கை 2020 வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அவற்றின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது.

கல்விக் கொள்கை வடிவமைப்பில், திமுக அரசு ஐந்து ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது என்பதை இனியாவது முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். உங்கள் அரசியலுக்காக தமிழகப் பள்ளி மாணவர்கள் கல்வியில் விளையாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: why four years to Xerox? - Annamalai Questionbjp k annamalaiannamalai mk stalinnew education policy 2020State Education Policy.
ShareTweetSendShare
Previous Post

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

Related News

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

புதிய 4 வழிச்சாலை : மத்திய அரசு ஒப்புதல்!

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

வாக்கு வங்கிக்காக வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு!

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் எம்போகா!

உத்தரப்பிரதேசம் : பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies