மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, நீதி கேட்டு பேரணி சென்றவர்கள் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அமைத்திருந்த தடுப்புகளைத் தள்ளிவிட்டு பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தினர்.