நெல்லையில் சாலை பணிகளுக்காகக் கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை சுத்தமல்லி விலக்கு பகுதியில் புறவழிச்சாலைக்காக ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
இதனால் அங்கு உள்ள உச்சிபிள்ளையார் மற்றும் சாந்த விநாயகர் கோயில்களை இடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்றும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.