மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்குத் தீவைத்த மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம், பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். கடந்த மாதம் 13-ம் தேதி, தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துவிட்டு தர்மலிங்கம் உறங்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கார்மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து கார்பற்றி எரிவதை கண்ட பணியாளர்கள், போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தர்மலிங்கம் புகாரளித்த நிலையில், மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, காருக்குத் தீவைக்கும் நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.