பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? - "நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்"!
Mar 15, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏலியன்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் தனித்திருக்கிறோம் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஏற்க மறுக்கின்றனர். வேற்று கிரகங்களில் நம்மைப் போன்றவர்களோ அல்லது நம்மைவிட மேலான அறிவு கொண்டவர்களோ இருக்கலாமென அவர்கள் திடமாக நம்புகின்றனர். இதுதொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்தான் பூமியை நோக்கி ஒரு மர்மபொருள் வந்துகொண்டிருக்கிறது என்ற அந்தச் செய்தி அண்மையில் வெளியானது. அந்தப் பொருள் சாதாரண எரிகல்லாகவோ, வால் நட்சத்திரமாகவோ இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறினர். விநாடிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் அந்தப் பொருள், அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரம் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக உள்ளது.

ஆனால், அது வால் நட்சத்திரமாகவோ அல்லது எரிகல்லாகவோ இருக்கலாம் என்ற யூகத்தை விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் திட்டவட்டமாக மறுக்கின்றனர். அது சர்வ நிச்சயமாக ஏலியன்கள் அனுப்பி வைத்த விண்கலன்தான் எனவும் அவர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

இந்த விண்கலம் உண்மையிலேயே ஏலியன்கள் அனுப்பியதா? தெரியாது. அதன் மூலம் ஏலியன்கள் பூமிக்கு வரவுள்ளனரா? தெரியாது. அப்படியே பூமிக்கு வந்தாலும் அவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கும் பதிலில்லை. எனவே, மனிதர்களாகிய நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இது கறித்து கருத்து தெரிவித்துள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் வானியல் துறைத் தலைவர் டாக்டர் அவி லோப், “ஒருவேளை ஏலியன்கள் பூமிக்கு வந்தால் நமக்கு உதவலாம். அல்லது அவர்கள் நம்மை அழிக்கலாம். எனவே எதற்கும் தயாராக இருப்பது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பூமியை நோக்கி வரும் பொருள், வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. இந்தப் பொருளின் முன்பகுதி பிரகாசமாக உள்ளதை சுட்டிக்காட்டும் அவர், மனித குலம் இது போன்ற ஒன்றை இதற்கு முன் பார்த்ததே இல்லை எனக் கூறியுள்ளார்.

அந்தப் பொருளின் தனித்தன்மையை பார்க்கும்போது, அது நிச்சயமாக அறிவார்ந்த மற்றொரு சமூகத்தால் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், வருவது விண்கலம் என்பதையும், அதில் பயணிப்பவர்கள் ஏலியன்கள் என்பதையும் நாசா ஏற்கவில்லை. அந்த பொருள் குறித்து இப்படி இரு வேறு கருத்துக்கள் நிலவி வருவதால், அதனை ஆய்வு செய்யும் பணி இரவு பகலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags: பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்?Aliens coming towards Earth? "We must be prepared for everything"!
ShareTweetSendShare
Previous Post

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் : பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies