பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? - "நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்"!
Sep 30, 2025, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

Web Desk by Web Desk
Aug 12, 2025, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏலியன்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் தனித்திருக்கிறோம் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஏற்க மறுக்கின்றனர். வேற்று கிரகங்களில் நம்மைப் போன்றவர்களோ அல்லது நம்மைவிட மேலான அறிவு கொண்டவர்களோ இருக்கலாமென அவர்கள் திடமாக நம்புகின்றனர். இதுதொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்தான் பூமியை நோக்கி ஒரு மர்மபொருள் வந்துகொண்டிருக்கிறது என்ற அந்தச் செய்தி அண்மையில் வெளியானது. அந்தப் பொருள் சாதாரண எரிகல்லாகவோ, வால் நட்சத்திரமாகவோ இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறினர். விநாடிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் அந்தப் பொருள், அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரம் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக உள்ளது.

ஆனால், அது வால் நட்சத்திரமாகவோ அல்லது எரிகல்லாகவோ இருக்கலாம் என்ற யூகத்தை விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் திட்டவட்டமாக மறுக்கின்றனர். அது சர்வ நிச்சயமாக ஏலியன்கள் அனுப்பி வைத்த விண்கலன்தான் எனவும் அவர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

இந்த விண்கலம் உண்மையிலேயே ஏலியன்கள் அனுப்பியதா? தெரியாது. அதன் மூலம் ஏலியன்கள் பூமிக்கு வரவுள்ளனரா? தெரியாது. அப்படியே பூமிக்கு வந்தாலும் அவர்கள் என்ன செய்வார்கள்? அதற்கும் பதிலில்லை. எனவே, மனிதர்களாகிய நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இது கறித்து கருத்து தெரிவித்துள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் வானியல் துறைத் தலைவர் டாக்டர் அவி லோப், “ஒருவேளை ஏலியன்கள் பூமிக்கு வந்தால் நமக்கு உதவலாம். அல்லது அவர்கள் நம்மை அழிக்கலாம். எனவே எதற்கும் தயாராக இருப்பது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பூமியை நோக்கி வரும் பொருள், வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. இந்தப் பொருளின் முன்பகுதி பிரகாசமாக உள்ளதை சுட்டிக்காட்டும் அவர், மனித குலம் இது போன்ற ஒன்றை இதற்கு முன் பார்த்ததே இல்லை எனக் கூறியுள்ளார்.

அந்தப் பொருளின் தனித்தன்மையை பார்க்கும்போது, அது நிச்சயமாக அறிவார்ந்த மற்றொரு சமூகத்தால் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், வருவது விண்கலம் என்பதையும், அதில் பயணிப்பவர்கள் ஏலியன்கள் என்பதையும் நாசா ஏற்கவில்லை. அந்த பொருள் குறித்து இப்படி இரு வேறு கருத்துக்கள் நிலவி வருவதால், அதனை ஆய்வு செய்யும் பணி இரவு பகலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags: பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்?Aliens coming towards Earth? "We must be prepared for everything"!
ShareTweetSendShare
Previous Post

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் : பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

Related News

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies