பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? - 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
Aug 12, 2025, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? – 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 12, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் வழியாகப் பாலாற்றில் கழிவு நீரை வெளியேற்றும் தோல் பதனிடும் ஆலைகளை மூட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி விரிவான உத்தரவு வழங்கியது. இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் பெரும் சவாலாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 20 ஆண்டுகளாகச் செயல்பாட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்டதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லாதது கவலை அளிக்கிறது எனக் கூறினர்.  பாலாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,

உத்தரவு காகிதத்தில் மட்டும் இருக்கக்கூடாது, முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.  பாலாறு மாசுபடுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது நோக்கம் எனக்கூறிய நீதிபதிகள்,

மாவட்ட ஆட்சியர்கள் முயற்சி செய்யாதவரை எதுவும் நடக்காது எனத் தெரிவித்தனர். கழிவுநீர் மாசுவை தடுப்பதில் மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாகத் தமிழக மாவட்ட ஆட்சியர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள்,

பாலாறு மாசுபாட்டைத் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்கச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags: பாலாறு மாசுபாடுsuprem courttn govtWhat kind of measures are you taking to prevent pollution in Palaru? - Supreme Court orders Tamil Nadu government to file a report within 2 weeks
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடல்!

Next Post

கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!

Related News

பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

ராகுல் காந்தியின் கருத்தை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ராஜண்ணா ராஜினாமா!

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

பட்டாபிராம் அருகே கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: – விசாரணைக் குழு அமைப்பு!

தூய்மை பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்!

பிரதமர் மோடியுடன் செப்டம்பரில் நேரில் சந்திப்பு : ஜெலன்ஸ்கி தகவல்!

தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது அக்கட்சியினர் கொலைவெறி தாக்குதல்!

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

துப்பாக்கிச்சூடு – கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies