ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!
Sep 30, 2025, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

Web Desk by Web Desk
Aug 12, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் படகைத் துரத்தும்போது, சீனக் கடற்படை மற்றும் சீனக் கடலோர காவல்படை கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தால்  சீனாவுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தென் சீனக் கடல், எப்போதும் பரபரப்பாக இருக்கும் உலகின் முக்கியமான கடல் பாதையாகும். உலக அளவில்,   60 சதவீதத்துக்கும் அதிகமான வர்த்தகம் இதன் மூலமே நடைபெறுகிறது. தென் சீனக் கடலில் சீனாவுக்கும்  பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

1990களில், பிலிப்பைன்ஸில் அமெரிக்கா ராணுவத் தளங்களை மூடியதும், மணிலாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் உள்ள மிஷீஃப் ரீஃப்பைச் சீனா கைப்பற்றியது. அப்போதிலிருந்தே சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் மோதல் தொடங்கியது.

தொடர்ந்து, பிலிப்பைன்ஸிலிருந்து ஸ்கார்பரோ ஷோலை சீனா கைப்பற்றியபோது நிலைமை இன்னும் மீண்டும் மோசமடைந்தது. பிலிப்பைன்ஸ் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சீனா துன்புறுத்துவது இன்றும் தொடர்கிறது.

இந்த கடலோரப் பகுதி என்பது பாறைகள் மற்றும் பாறைகளின் முக்கோண வடிவ சங்கிலியாகும். இந்த கடற்கரையில் ஏராளமான மீன்கள் உள்ளன. தென் சீனக் கடலில் அமைந்துள்ள இந்தப் பகுதியில்,ஆண்டு தோறும் சுமார் 3 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு  வர்த்தகம் நடைபெறுகிறது.

வியட்நாம், மலேசியா, புரூனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் தென்சீனக் கடலின் சில பகுதிகள் தங்களுக்கு உரிமை உள்ளன என்று சொல்லுகின்றன. கடந்த ஆண்டுகளில், கடல் உரிமை குறித்து சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இரண்டாண்டுகளுக்கு முன், ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நாட்டின் அதிபராகப் பதவியேற்றதிலிருந்து நிலைமை சிறிதும் மேம்படவில்லை.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் படகு மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில், தங்களைத் துரத்தி வந்த இரண்டு சீனக் கப்பல்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாகவும் பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

சீனக் கடற்படை மற்றும் சீனக் கடலோர காவல்படை கப்பல்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகளை,  பிலிப்பைன்ஸ்  கடலோரக் காவற்படை வெளியிட்டுள்ளது. இது குறித்து, சீனா கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது. என்றாலும் தென் சீனக் கடலில் தங்கள் எல்லையைக் கண்காணித்து வருவதாகவும், பிலிப்பைன்ஸ் கப்பல்கள் எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு, சர்ச்சைக்குரிய இந்த தென் சீனக் கடலில் எட்டுக்கும் மேற்பட்ட படகுகளில்  சீன கடலோர காவல்படை வீரர்கள், இரண்டு பிலிப்பைன்ஸ் கடற்படை படகுகள் மீது ஆக்ரோஷமாக மோதினார்கள்.  வாள்கள், ஈட்டிகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய சீன கடலோர காவல்படை வீரர்களை எதிர்த்து வெறும் கைகளுடன் பிலிப்பைன்ஸ் வீரர்கள் சண்டையிட்டதாக அந்நாட்டின் உயர் இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார். மேலும் அந்த மோதலில்,ஒரு பிலிப்பைன்ஸ் வீரர் தம் கட்டைவிரலை இழந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தென் சீனக் கடலில் ஏற்படும் எந்தவொரு சண்டையும்,  சீனாவுக்கும்  அமெரிக்காவுக்கும்  இடையே போர்ச்சுழலை உருவாக்கக் கூடும் என்று புவிசார் அரசியல் பார்வையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Tags: Chinese ships collide: Misfortune strikes as Philippine boat chases themஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள்தென் சீனக் கடல்
ShareTweetSendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Next Post

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies