சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை லட்சுமி மஞ்சு ஆஜரானார்.
ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சூதாட்ட செயலிகளை நடிகர், நடிகைகள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரித்துப் பிரபலப்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, நடிகை லட்சுமி மஞ்சு உட்பட 29 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அதன் அடிப்படையில் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை லட்சுமி மஞ்சு ஆஜராகினார்.