இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா - வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!
Oct 1, 2025, 11:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியா 4வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..

ஆங்கிலேயர் வருகைக்கு முன், உலகின் பெரும் பணக்காரத் தேசமாகப் பாரதம் விளங்கியது. 1700ம் ஆண்டில்,   உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 24.4 சதவீதமாக இருந்தது. விடுதலையின் போது,  உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு வெறும் 4.2 சதவீதமாக இருந்தது.

1765ம் ஆண்டு முதல் 1900ம் ஆண்டு வரையில் சுமார் 64.82 டிரில்லியன் டாலர்களைப் பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றதாக ஆக்ஸ்பாம்  ஆய்வறிக்கை கூறுகிறது.

தேசப் பிரிவினையில், இந்தியாவின் மொத்த பொருளாதாரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ,அதில் ஒரு பகுதி பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது.  1947-ல் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியாவும், பாகிஸ்தானும் இருந்தன.

1961 மற்றும் 1980 ஆண்டுகளுக்கு இடையில், சுமார் ஆறு சதவீத  வளர்ச்சியுடன் பாகிஸ்தானும், நான்கு சதவீத வளர்ச்சியுடன் இந்தியாவும் இருந்தன.  கிழக்கு பாகிஸ்தானின் வர்த்தகத்தாலும்,  அமெரிக்காவின் பில்லியன்  டாலர்கள் ராணுவ உதவியாலும், மேற்காசிய இஸ்லாமிய  நாடுகளிடமிருந்து பெற்ற நன்கொடைகளாலும் பாகிஸ்தான் வளர்ச்சி அடைந்தது.

தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாக 1990ஆம் License-Permit Quota சிஸ்டத்தை இந்தியா நீக்கிய பிறகு இந்தியா ஆண்டுதோறும், சராசரியாக எட்டு சதவீத வளர்ச்சியில்  வேகமாக முன்னேறியது. இன்னொருபுறம் பாகிஸ்தான் கடுமையாகத் தடுமாறத் தொடங்கியது.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமான இந்தியா, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்,ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் இரண்டாவது பெரிய  பொருளாதாரமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் 0.37 டிரில்லியன் டாலர் கொண்ட பாகிஸ்தானின் பொருளாதாரத்தை விட 10 மடங்கு அதிகமாக,  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  3.88 டிரில்லியன் டாலராக உள்ளது என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் தனிநபர் வருமானத்தை விடப் பாகிஸ்தானின் தனிநபர் வருமானம் 50 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. வரத்தகத்தைப் பொறுத்தவரை, பாகிஸ்தானை விட 17 மடங்கு அதிகமாக  இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு  688 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கிறது. அதேநேரம் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி இருப்பு 15 பில்லியன் டாலருக்கும் குறைவாகவே உள்ளது.

உலகின் நான்காவது வலிமையான ராணுவ சக்தியாக இந்தியா விளங்குகிறது. அதே பட்டியலில் 12வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. இராணுவத்துக்காக  86.1 பில்லியன் டாலர்  செலவு செய்து, உலகின் ஐந்தாவது பெரிய இராணுவச் செலவு நாடாக இந்தியா உள்ளது. 2024 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 2.3 சதவீதமாகும்.

அதே ஆண்டு, இராணுவத்துக்காக 10.2 பில்லியன் டாலரைப் பாகிஸ்தான் செலவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதம் ஆகும். முப்படை வீரர்கள் கணக்கிலும், ஆயுதத் தளவாடங்கள் வகையிலும் பாகிஸ்தானை விட இந்தியா மும்மடங்கு அதிக எண்ணிக்கையுடன் முன்னணியில் உள்ளது.

விளையாட்டுத் துறையில் குறிப்பாக கிரிக்கெட்டில், இந்தியா- பாகிஸ்தான் போட்டி இருநாடுகளில் மட்டுமின்றி,உலக அளவிலும் கூர்ந்து கவனிக்கப்படும்.  கடந்த பிப்ரவரியில், துபாயில் நடந்த  சாம்பியன்ஸ் டிராபி இந்தியா பாகிஸ்தான் போட்டியை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 20.6 கோடி பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் கண்டு களித்தனர். இது உலகக் கோப்பை போட்டிகளைத் தவிர்த்து, வரலாற்றில் இரண்டாவது அதிகம் பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டி ஆகும்.

140 கோடி மக்கள் தொகையுடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், கடந்த மக்களவை தேர்தலில், சுமார் 95 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கவைத்தனர். இது உலக மக்கள்தொகையில் எட்டில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் பாகிஸ்தானில் ஜனநாயகம் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. பலமுறை இராணுவ ஆட்சி நடந்துள்ளது. தேர்தல் நடைமுறை இருந்தாலும், பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரம் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

ஒரே நாளில் சுதந்திரம் பெற்றாலும் எட்ட முடியாத உயரத்தில் இந்தியா வீறுநடை போடுகிறது. பாகிஸ்தான் வீம்புக்கு இந்தியாவுடன் போட்டிப் போட கூட தெம்பில்லாமல், பொருளாதார நெருக்கடியில் தம் மக்களுக்கு உணவு கூட கொடுக்க முடியாத நிலையில் பரிதாபமாக இருக்கிறது.

Tags: 79th Independence Day todayindependce dayIndia Vs Pakistan: India on the move - Pakistan on the decline!இந்தியா Vs பாகிஸ்தான்வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

Next Post

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

Related News

ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிசிஎஸ்!

ஆர்எஸ்எஸ் நுாறாண்டு சேவையை சாத்தியமாக்கியது பாரத சமுதாயமே – தத்தாத்ரேயா ஹொசபலே

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சந்திக்க மறுத்த கரூர் அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION – தேஜஸ்வி சூர்யா

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா : அக்.2-ல் சூரசம்ஹாரம்!

கிருஷ்ணகிரி : ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவிக்கு விவாகரத்து – சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு!

காங்கேயம் அருகே விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்ட முயன்ற திமுகவினர் – தவெக தொண்டர்கள் எதிர்ப்பு!

கொடைக்கானல் – குப்பைகளை கொண்டு புலி முகத்தை வடிவமைத்த தன்னார்வ அமைப்பு!

கோவையில் வடமாநில மக்கள் சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழா – ஏராளமானோர் பங்கேற்பு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் – திருவாடானையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

திருவண்ணாமலை ஆவணியாபுரம் சீனிவாச பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி 9-ம் நாள் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies