கனமழை காரணமாகக் குற்றால அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகக் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து அருவிகளிலும் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் விடுமுறையைக் கொண்டாடக் குற்றாலம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.