இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!
Oct 3, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

Web Desk by Web Desk
Aug 18, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் ஹைட்ரஜன் ரயில்கள் உள்ள நிலையில், இந்த வரிசையில் 5வது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது.

நீல நிறத்தில் முழு நீள ஹைட்ரஜன் ரயில் பற்றிய வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் இணைத்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். ஹைட்ரஜன் ரயிலில் உள்ள அம்சங்களை படம்பிடித்துக் காட்டும் அந்த வீடியோ Coming soon என்று முடிகிறது.

இதன் மூலம், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது என்றும் ஹிண்ட்  கொடுத்திருக்கிறார் அவர். கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்​களவை​யில் பேசிய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், “பாரம்​பரிய நகரங்​களுக்கு ஹைட்ரஜன்” என்ற திட்​டத்​தின்கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்​களை இயக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரிவித்திருந்தார்.

அவரது அறிவிப்பு செயலாக்கம் பெற்ற நிலையில், அண்மையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது சென்னை ஐசிஎப் தொழிற்சாலை.

136 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரஜன் ரயில் திட்டம், ஜீரோ கார்​பன் உமிழ்வு நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இலக்குகளை இந்தியா விரைவில் எட்ட உதவும்.
தற்போது பரிசோதனை நிலையில் உள்ள ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலம் ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 2600 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். இரண்டு வழித் தடங்களில் நாள்தோறும் 356 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக ஜிந்த் நகரில் 3000 கிலோ ஹைட்ரஜனை சேமிக்கும் வகையிலான ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் அமைக்கப்பட்டது. இங்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரஸர் மற்றும் டிஸ்பென்சர்கள் மூலம் ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் ஹைட்ரஜன் ரயில்கள் உள்ள நிலையில்,  இந்த வரிசையில் 5வது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது.

மேற்கண்ட நாடுகள் 500 முதல் 600 குதிரைத்திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கியிருந்தாலும், இந்தியா ஆயிரத்து 200 குதிரைத்திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கியிருப்பது, ரயில்வே உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: New milestone for Indian Railways: Hydrogen train ready to flyஇந்திய ரயில்வேயின் புதிய மைல்கல்
ShareTweetSendShare
Previous Post

குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!

Next Post

மண்வெட்டியால் மகனை அடித்து கொலை செய்த தாய்!

Related News

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

இந்தியா வருவது கெளரவம் – மெஸ்ஸி நெகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

அரை டிரில்லியனை சம்பாதித்த முதல் நபரான எலான் மஸ்க்!

அரிச்சுவடி ஆரம்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies