இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!
Mar 15, 2026, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

Murugesan M by Murugesan M
Aug 18, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் ஹைட்ரஜன் ரயில்கள் உள்ள நிலையில், இந்த வரிசையில் 5வது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது.

நீல நிறத்தில் முழு நீள ஹைட்ரஜன் ரயில் பற்றிய வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் இணைத்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். ஹைட்ரஜன் ரயிலில் உள்ள அம்சங்களை படம்பிடித்துக் காட்டும் அந்த வீடியோ Coming soon என்று முடிகிறது.

இதன் மூலம், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது என்றும் ஹிண்ட்  கொடுத்திருக்கிறார் அவர். கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்​களவை​யில் பேசிய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், “பாரம்​பரிய நகரங்​களுக்கு ஹைட்ரஜன்” என்ற திட்​டத்​தின்கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்​களை இயக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரிவித்திருந்தார்.

அவரது அறிவிப்பு செயலாக்கம் பெற்ற நிலையில், அண்மையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது சென்னை ஐசிஎப் தொழிற்சாலை.

136 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரஜன் ரயில் திட்டம், ஜீரோ கார்​பன் உமிழ்வு நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இலக்குகளை இந்தியா விரைவில் எட்ட உதவும்.
தற்போது பரிசோதனை நிலையில் உள்ள ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலம் ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 2600 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். இரண்டு வழித் தடங்களில் நாள்தோறும் 356 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக ஜிந்த் நகரில் 3000 கிலோ ஹைட்ரஜனை சேமிக்கும் வகையிலான ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் அமைக்கப்பட்டது. இங்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரஸர் மற்றும் டிஸ்பென்சர்கள் மூலம் ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் ஹைட்ரஜன் ரயில்கள் உள்ள நிலையில்,  இந்த வரிசையில் 5வது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது.

மேற்கண்ட நாடுகள் 500 முதல் 600 குதிரைத்திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கியிருந்தாலும், இந்தியா ஆயிரத்து 200 குதிரைத்திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கியிருப்பது, ரயில்வே உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: New milestone for Indian Railways: Hydrogen train ready to flyஇந்திய ரயில்வேயின் புதிய மைல்கல்
ShareTweetSendShare
Previous Post

குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!

Next Post

மண்வெட்டியால் மகனை அடித்து கொலை செய்த தாய்!

Related News

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies