இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!
Aug 15, 2025, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

Web Desk by Web Desk
Aug 15, 2025, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் ஹைட்ரஜன் ரயில்கள் உள்ள நிலையில், இந்த வரிசையில் 5வது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது.

நீல நிறத்தில் முழு நீள ஹைட்ரஜன் ரயில் பற்றிய வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் இணைத்துள்ளார் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். ஹைட்ரஜன் ரயிலில் உள்ள அம்சங்களை படம்பிடித்துக் காட்டும் அந்த வீடியோ Coming soon என்று முடிகிறது.

இதன் மூலம், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது என்றும் ஹிண்ட்  கொடுத்திருக்கிறார் அவர். கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்​களவை​யில் பேசிய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், “பாரம்​பரிய நகரங்​களுக்கு ஹைட்ரஜன்” என்ற திட்​டத்​தின்கீழ் 35 ஹைட்ரஜன் ரயில்​களை இயக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரிவித்திருந்தார்.

அவரது அறிவிப்பு செயலாக்கம் பெற்ற நிலையில், அண்மையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது சென்னை ஐசிஎப் தொழிற்சாலை.

136 கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரஜன் ரயில் திட்டம், ஜீரோ கார்​பன் உமிழ்வு நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இலக்குகளை இந்தியா விரைவில் எட்ட உதவும்.
தற்போது பரிசோதனை நிலையில் உள்ள ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலம் ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 2600 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். இரண்டு வழித் தடங்களில் நாள்தோறும் 356 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக ஜிந்த் நகரில் 3000 கிலோ ஹைட்ரஜனை சேமிக்கும் வகையிலான ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் அமைக்கப்பட்டது. இங்குள்ள ஹைட்ரஜன் கம்ப்ரஸர் மற்றும் டிஸ்பென்சர்கள் மூலம் ரயிலில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் மட்டும்தான் ஹைட்ரஜன் ரயில்கள் உள்ள நிலையில்,  இந்த வரிசையில் 5வது நாடாக இந்தியாவும் இணைய உள்ளது.

மேற்கண்ட நாடுகள் 500 முதல் 600 குதிரைத்திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை உருவாக்கியிருந்தாலும், இந்தியா ஆயிரத்து 200 குதிரைத்திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கியிருப்பது, ரயில்வே உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: New milestone for Indian Railways: Hydrogen train ready to flyஇந்திய ரயில்வேயின் புதிய மைல்கல்
ShareTweetSendShare
Previous Post

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

Next Post

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies