கிருஷ்ண ஜெயந்தி - கிருஷ்ணர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
Nov 16, 2025, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி – கிருஷ்ணர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Web Desk by Web Desk
Aug 16, 2025, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த தினம் சிறப்புக்குரியது. ஆண்டுதோறும் ஆவணி மாத தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாள்தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி கோயிலில் அதிகாலை மங்கல ஆரத்தி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள பிரேம் பிரதிக் கோயிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள கோவிந்த் தேவ் ஜி கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் கோயிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ராதையுடன் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெய்ந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணரும், ராதையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இஸ்கான் கோயிலில் கீர்த்தனை, நீராட்டு விழா நடைபெறவுள்ளதாக இஸ்கான் அமைப்பின் வங்கதேச பொதுச்செயலாளர் சாரு சந்திரதாஸ் பிரம்மாச்சாரி தெரிவித்துள்ளார். மேலும், வங்கதேச அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: special pujaKrishna templesAshtami TithiKrishna JayantiMaha Vishnu
ShareTweetSendShare
Previous Post

ஆர்.ஆர்.எஸ்., முதல் ஆளுநர் வரை – இல.கணேசன் கடந்து வந்த பாதை!

Next Post

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies