ஜப்பானின் கியூஷுவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ, ஃபுகுவோகா மற்றும் ககோஷிமா ஆகிய நகரங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்நிலையில் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.