காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் இந்த ஆற்றில் 8,000 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
அதன்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இடைவிடாமல் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து 50 ஆயிரத்தை நெருங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.