ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 55 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்தணி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சென்றபோது, பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.