FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்...!
Jan 14, 2026, 08:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Murugesan M by Murugesan M
Aug 18, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த பில்லியனர்களுக்கான பட்டியலில், தைவான் மற்றும் இஸ்ரேலை பின்னுக்கு தள்ளி, 12 கோடீஸ்வரர்களுடன், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

உலகின் 78 நாடுகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பில்லியனர்கள் உள்ளனர். அவர்களின் மொத்த நிகர மதிப்பு 16.1 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அவர்களுள் மூன்றில் ஒரு பங்கு பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

செல்வந்தர்களுக்கான இடம்பெயர் மையமாக உள்ள அமெரிக்கா, 41 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 125 பில்லியனர்களை கொண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஃபோர்ப்ஸ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவர்கள் மொத்தமாக 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புள்ள செல்வத்தை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அமெரிக்காவில் வசிக்கும் உலகின் முதல் 3 பில்லியனர்களும் வெளிநாட்டில் பிறந்தவர்களே என்கிறது ஃபோர்ப்லின் ஆய்வறிக்கை.

குறிப்பாக உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் தென் ஆப்ரிக்க நாட்டில் பிறந்தவர். அடுத்த இடத்திலுள்ள கூகுல் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின் ரஷ்யாவைச் சேர்ந்தவர். அதேபோல, என்விடியா தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங் தாய்வானைச் சேர்ந்தவர்.

கடந்த 2022-ம் ஆண்டு வரை அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த பில்லியனர்களுக்கான பட்டியலில், தைவான் மற்றும் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி இந்தியாவை முதன்மை நாடாக மாற்றியுள்ளது.

உலகளவில் 8-வது பணக்காரரும், சைபர் பாதுகாப்பு நிறுவனம் ZSCALER-ன் இணை நிறுவனருமான ஜெய் சவுத்ரி, 17.9 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிகர மதிப்புடன் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, பாலோ ஆல்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிகேஷ் அரோரா உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஃபோர்ப்ஸ் ஆய்வறிக்கையின்படி அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த பில்லியனர்களான 125 பேரில்,  12 பேர் இந்தியாவிலும், தலா 11 பேர் இஸ்ரேல் மற்றும் தாய்வானிலும், 9 பேர் கனடாவிலும், 8 பேர் சீனாவிலும் பிறந்தவர்களாவர். அதேபோல, தலா 6 பேர் ஜெர்மனி மற்றும் ஈரானில் பிறந்தவர்கள் என்றும், 5 பேர் பிரான்ஸில் பிறந்தவர்கள் என்றும், தலா 4 பேர் ஹங்கேரி மற்றும் உக்ரைனில் பிறந்தவர்கள் என்றும் ஃபோர்ப்ஸ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Tags: india newsFORBES' list of Indian billionaires living in the US: India tops the list with 12 billionairesFORBES
ShareTweetSendShare
Previous Post

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

Next Post

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies