புதினின் "மலக் கழிவுகள்" சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?
Sep 11, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

Murugesan M by Murugesan M
Aug 18, 2025, 08:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிரம்புடானான அலஸ்கா சந்திப்புக்கு புதினுடன் சென்ற மெய்க்காப்பாளர்கள் அவரது மலக் கழிவுகளை சேகரித்து எடுத்துச் செல்ல ஒரு சூட்கேசுடன் சென்ற சம்பவம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

ரஷ்ய அதிபரான விளாடிமிர் புதின் உலகில் மிக அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பல அடுக்குகள், பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் விசேஷ படைத்துறை அமைப்புகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக அமைகிறது.

அமெரிக்காவின் SECRETE SERVICE போன்று, ரஷ்யாவில் FEDERAL PROTECTIVE SERVICE என்கிற சிறப்புப் பிரிவு, புதினை பாதுகாக்கும் பிரதான அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவைச் சேர்ந்த சுமார் 20 முதல் 30 பேர் வரையில், எப்போதும் புதின் அருகிலேயே மெய்க்காப்பாளர்களாக நின்று அவரை இரவு பகலாகப் பாதுகாக்கின்றனர். ரஷ்ய அதிபர் புதினின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிறப்புப் பிரிவை, அந்நாட்டின் வேறு எந்த அதிகார அமைப்பாலும் கட்டுப்படுத்த இயலாது.

வெளிப்படையாகக் காட்சியளிக்கும் மெய்க்காப்பாளர்களைத் தாண்டி மறைமுகமாக இருந்தும் பலர் அவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த சிறப்புப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் உயர்நிலை தாக்குதல் தடுப்பு பயிற்சி பெற்றவர்கள் எனவும், HAND TO HAND COMBAT , துப்பாக்கி சுடும் திறன் மற்றும் நுண்ணறிவு கண்காணிப்பு போன்ற அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இது தவிர, 1000 கிலோ TNT வெடிபொருட்களைக் கூட தாங்கும் திறனுள்ள பிரத்தியேக பயண வாகனம், சாப்பிடும் உணவுகளை முன்கூட்டியே பரிசோதிக்க பிரத்தியேக உணவு சுவைப்பாளர், முழு எலக்ட்ரானிக் பாதுகாப்புடன் அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட தனி விமானம், தனிப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் ஆகியவையும் அதிபர் புதினின் பாதுகாப்பு அம்சங்களுள் அடங்கும்.

மொத்தத்தில் அதிபர் புதின் மீதான கொலை முயற்சி, விஷத் தாக்குதல், ட்ரோன் அல்லது ஏவுகணை தாக்குதல் ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு மிக கடினமான பாதுகாப்பு வளையத்தினுள் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினின் வெளிநாட்டுப் பயணங்களில் கூட உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்து நிற்காமல், புதினின் சொந்த பாதுகாப்புக் குழுவே முன்னிலை வகிக்குமாம். அண்மையில் அலாஸ்காவில் நடந்த அதிபர் டிரம்புடனான சந்திப்பின்போது, அதிபர் புதினின் மெய்காப்பாளர்கள் அவரது மலக் கழிவுகளை சேகரித்து எடுத்துச் செல்ல ஒரு சூட்கேஸை சுமந்து சென்றது பல்வேறு செய்தி ஊடகங்களில் பேசுபொருளானது.

இந்நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒருவரின் மலக்கழிவு அல்லது சிறுநீர் மாதிரிகளில் இருந்து அவரது உடல்நிலை, ஹார்மோன் சமநிலை, நோய் மற்றும் மருந்து பயன்பாடு போன்ற பல தகவல்களை கண்டறிய முடியும். ஆக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களோ, பிற அமைப்புகளோ புதினின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதைத் தடுக்கவே அவரது மெய்க்காப்பாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவரது மலம் மற்றும் சிறுநீர் கழிவுகள் பிரத்தியேக பைகளில் சேமிக்கப்பட்டு, அதற்குரிய பெரிய ரக சூட்கேஸில் அடைக்கப்பட்டு ரஷ்யாவிற்குக் கொண்டு செல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. புதினை தவிர ஸ்டாலின், கிம் ஜாங் உன் போன்ற குறிப்பிட்ட சில தலைவர்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டதாக வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Tags: russiavladimir puthinrussia newsrussia warExclusive suitcase to collect Putin's "feces": Do you know the reason?
Share
Tweet
SendShare
Previous Post

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

Next Post

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies