ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய சிவகங்கை ராணுவ வீரருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, சிந்தூர் ஆபரேஷன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா அழித்தது.
அதில், இந்தியாவைத் தாக்குவதற்காக அனுப்பப்பட்ட பாகிஸ்தானின் ட்ரோன்களை, எல்லை பாதுகாப்புப் பணியில் இருந்த சிவகங்கையைச் சேர்ந்த ராணுவ வீரர் கந்தன் இடைமறித்துச் செயலிழக்கச் செய்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கந்தனுக்கு ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தங்கப் பதக்கத்தை வழங்கி பாராட்டினார்.
தற்போது, கந்தன் ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வரும் நிலையில், பதக்கம் பெற்ற ராணுவ வீரர் கந்தனுக்கு அவரது சொந்த ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.