சென்னை வேளச்சேரியில் மாநகராட்சியின் திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புவனேஸ்வரி நகரில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனை சென்னை மாநகராட்சியின் திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சீல் வைத்தனர்.
சென்னை மாநகராட்சியின் திட்ட அனுமதி பெறாமல் கட்டிய தனியார் மருத்துவமனைக்குச் சீல் வைத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.
சென்னை வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் இயங்கி வந்த (VRSI) வி.ஆர்.எஸ்.ஐ. என்ற தனியார் பல்நோக்கு மருத்துவமனை சென்னை மாநகராட்சியின் திட்ட அனுமதி பெறாமல் கட்டியதாக கூறி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பல்நோக்கு மருத்துவமனைக்குச் சீல் வைத்தனர்.
திடீரென போலீசாருடன் சென்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சீல் வைத்த நிலையில் மருத்துவமனையின் உரிமையாளர் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்குப் பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் உரிய அனுமதி பெற்றால் மருத்துவமனையில் வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் என்று கூறி மருத்துவமனை உரிமையாளரை அனுப்பி வைத்தனர்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்குச் சீல் வைத்த சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.