பிரிட்டன் கடற்படையில் முதல் முறையாகக் கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் மதபோதகராக பணியாற்றும் பெருமையை இமாச்சல் பிரேதத்தைச் சேர்ந்த நபர் தட்டிச்சென்றுள்ளார்.
பிரிட்டன் கடற்படையில் சேப்லயன் பொறுப்பில் பணிபுரிபவர்கள், அதிகாரியாக மட்டுமல்லாமல் கடற்படை வீரர்களுக்கு மத போதனைகனை வழங்குபவராகவும் உள்ளனர்.
அந்த வகையில், இமாச்சல் பிரதேசத்தில் பிறந்து தற்சமயம் இங்கிலாந்தில் வசித்து வரும் பானு அட்ரி என்பவர், இந்து மதத்தில் இருந்து சேப்லயனாக பணியாற்றும் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதுமட்டுமல்ல, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக சேப்லயனாக பணியாற்றும் பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகிறார் பானு அட்ரி.