கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, கேஸ் நிரப்ப வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர், தனது ஆம்னி காரில், வீரபாண்டி பிரிவு பகுதிக்குச் சென்றிருந்தார்.
அங்குள்ள பங்க்கில் தனது காருக்கு கேஸ் நிரப்பிக் கொண்டிருந்தபோது திடீரென கசிவு ஏற்பட்டு, ஆம்னி காரில் தீ பற்றியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், கார் முழுவதுமாக எரிந்து சேதடைந்தது.