பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை - உச்ச நீதிமன்றம்
Oct 10, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

Web Desk by Web Desk
Aug 22, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெரு நாய்களை காப்பகத்தில் அடைத்து வைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

நாடு முழுவதும் வெறிநாய்கடியால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல அலுவலர்கள் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த மனு கடந்த 13ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை நியமித்தார்.

அதன்படி, இந்த வழக்கில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா அமர்வு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

ஆக்ரோஷமான, ரேபிஸ் போன்ற நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும் என்றும், தெரு நாய்களை பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்களை தடுப்பவர்களுக்கு 25 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆணையிட்டனர்.

டெல்லியில் பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்கத் தடை விதித்த நீதிபதிகள்,
தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

வேறு இடங்களில் உணவு அளிப்போர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம் என்றும்,
தெருநாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், அனைத்து உயர்நீதிமன்றங்களில் உள்ள, தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: supreme courtdog biteincreasing number of deathsconfine stray dogs in shelters.
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Next Post

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

Related News

பழனியில் ராம்ராஜ் காட்டனின் 2வது கிளை திறப்பு!

ஜப்பான் : பூத்து குலுங்கும் சிவப்பு நிற அல்லி மலர்கள்!

நேரடி விமான சேவை இந்திய உறவை மேம்படுத்த உதவும் : சீனா

காசா அமைதி ஒப்பந்தம் – நெதன்யாகுவை பாராட்டிய பிரதமர் மோடி!

தேனி : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு!

ஈரோடு : பழங்களை கொண்டு சென்ற மினி சரக்கு வாகனம் கவிழ்ந்தது!

Load More

அண்மைச் செய்திகள்

காஸாவில் 55,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

ராணிப்பேட்டை : வெள்ளநீரில் மூழ்கிய தரைப்பாலம் – மாணவர்கள், கிராம மக்கள் அவதி!

திருப்பூர் : தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

இந்தோனேசியா : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய கார்னிவல்!

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies