புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி - சிறப்பு தொகுப்பு!
Oct 11, 2025, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Aug 24, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவத் துறையில் நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று நடைமுறையில் சாத்தியமாகி உள்ளது. புற்றுநோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன், முதல் கட்டப் பரிசோதனைகள் வெற்றிப் பெற்றுள்ளன. இந்தப் புதிய தடுப்பூசி, புற்றுநோயாளிகளுக்குப் புது நம்பிக்கையை அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1990 மற்றும் 2013ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2020ம் ஆண்டில், இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இது அடுத்த இரண்டாண்டுகளில் 14 லட்சத்துக்கும் அதிகமானது. இந்த ஆண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக சராசரியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 12.8 சதவீதமாக அதிகரிக்கிறது என்று பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில், சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் சுமார் 6 லட்சம் பேர் புற்றுநோயால் மரணமடைவதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிப்பதில் உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்படும் mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், முதற்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

பரிசோதனை செய்யப்பட்ட எட்டு நோயாளிகளுக்குப் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சி தடுக்கப் பட்டதாகவும், உடலின் வேறு இடங்களில் புதிய கட்டிகள் எதுவும் உருவாகவில்லை என்பது உறுதி செய்யப் பட்டது.

இதுவரை, உலகில் புற்றுநோய்களில் வெளிப்படுத்தப்படும் பொதுவான புரதங்களை குறிவைத்து அழித்தல் மற்றும் ஒரு நோயாளியின் புற்றுநோய் கட்டியுடன் பொருந்தக்கூடிய தடுப்பூசியைப் பிரத்யேகமாக உருவாக்குதல் ஆகிய இரண்டு முறைகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய முறையைக் கண்டுபிடித்துள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், எலிகளில் உள்ள கட்டிகளை வெற்றிகரமாக அகற்றி mRNA தடுப்பூசி சிகிச்சையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இந்தச் சிகிச்சை, குறிப்பிட்ட கட்டி புரதங்களைக் குறிவைக்கும் பாரம்பரிய புற்றுநோய் தடுப்பூசிகளைப் போலல்லாமல், இந்த புதிய அணுகுமுறை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைச் சீர்செய்து புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கிறது.

ஒரு வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவது போல் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் புதுப்பிப்பதன் மூலம், புற்று நோய் கட்டியை அகற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு வகையான புற்றுநோய் கட்டிகளை அகற்ற நோயெதிர்ப்பு மண்டலத்தைப் புதுப்பிக்கும் இந்த மருத்துவக் கண்டுபிடிப்பு, அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற கஷ்டமான சிகிச்சைக்கு நல்ல மாற்றாக இது அமைந்துள்ளது.

உலகளாவிய புற்றுநோய் தடுப்பூசிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் புதிய வழிகளைத் திறந்து வைத்துள்ளது.

Tags: mRNA technologypreliminary trialsvaccine for cancercancer patients.medical scientists
ShareTweetSendShare
Previous Post

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

Next Post

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Related News

144 தடை உத்தரவு : இணையசேவை முடக்கம் – தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நேபாள குடும்பம் : ஹமாஸிடம் சிக்கியுள்ள இந்து மாணவர் விடுவிக்கப்படுவாரா?

பாக்., ராணுவத்தின் பினாமிதான் TLP – பணயக் கைதியாக இருக்கும் பாகிஸ்தான்?

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது – நோய் தடுப்புத்துறை இயக்குனர் சோம சுந்தரம்

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தவெக மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் – கரூர் நீதிமன்றம்!

ரஷ்ய வான்பரப்பை சீன விமானங்கள் பயன்படுத்த அமெரிக்கா கட்டுப்பாடு!

குஜராத் : ஷோரூம் முன்பு ஓலா ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய நபர்!

மேற்கு வங்கம் : மீண்டும் ஒரு மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை!

திருமாவளவன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies