புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி - சிறப்பு தொகுப்பு!
Jun 14, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 24, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவத் துறையில் நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று நடைமுறையில் சாத்தியமாகி உள்ளது. புற்றுநோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன், முதல் கட்டப் பரிசோதனைகள் வெற்றிப் பெற்றுள்ளன. இந்தப் புதிய தடுப்பூசி, புற்றுநோயாளிகளுக்குப் புது நம்பிக்கையை அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1990 மற்றும் 2013ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. 2020ம் ஆண்டில், இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இது அடுத்த இரண்டாண்டுகளில் 14 லட்சத்துக்கும் அதிகமானது. இந்த ஆண்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலக சராசரியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 12.8 சதவீதமாக அதிகரிக்கிறது என்று பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில், சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதில் சுமார் 6 லட்சம் பேர் புற்றுநோயால் மரணமடைவதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிப்பதில் உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கோவிட் 19 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்படும் mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், முதற்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

பரிசோதனை செய்யப்பட்ட எட்டு நோயாளிகளுக்குப் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சி தடுக்கப் பட்டதாகவும், உடலின் வேறு இடங்களில் புதிய கட்டிகள் எதுவும் உருவாகவில்லை என்பது உறுதி செய்யப் பட்டது.

இதுவரை, உலகில் புற்றுநோய்களில் வெளிப்படுத்தப்படும் பொதுவான புரதங்களை குறிவைத்து அழித்தல் மற்றும் ஒரு நோயாளியின் புற்றுநோய் கட்டியுடன் பொருந்தக்கூடிய தடுப்பூசியைப் பிரத்யேகமாக உருவாக்குதல் ஆகிய இரண்டு முறைகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய முறையைக் கண்டுபிடித்துள்ள புளோரிடா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், எலிகளில் உள்ள கட்டிகளை வெற்றிகரமாக அகற்றி mRNA தடுப்பூசி சிகிச்சையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இந்தச் சிகிச்சை, குறிப்பிட்ட கட்டி புரதங்களைக் குறிவைக்கும் பாரம்பரிய புற்றுநோய் தடுப்பூசிகளைப் போலல்லாமல், இந்த புதிய அணுகுமுறை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைச் சீர்செய்து புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கிறது.

ஒரு வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவது போல் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் புதுப்பிப்பதன் மூலம், புற்று நோய் கட்டியை அகற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு வகையான புற்றுநோய் கட்டிகளை அகற்ற நோயெதிர்ப்பு மண்டலத்தைப் புதுப்பிக்கும் இந்த மருத்துவக் கண்டுபிடிப்பு, அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற கஷ்டமான சிகிச்சைக்கு நல்ல மாற்றாக இது அமைந்துள்ளது.

உலகளாவிய புற்றுநோய் தடுப்பூசிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் புதிய வழிகளைத் திறந்து வைத்துள்ளது.

Tags: vaccine for cancercancer patients.medical scientistsmRNA technologypreliminary trials
ShareTweetSendShare
Previous Post

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

Next Post

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies