கலாம் 2047 நிகழ்ச்சி : தனித் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்!
Mar 15, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கலாம் 2047 நிகழ்ச்சி : தனித் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 25, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் சென்னை வானகரத்தில் ஞானாக்னி அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு போட்டிகளின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் திறமையை வெளிபடுத்த உதவிய கலாம் 2047 நிகழ்ச்சி குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கனவு காணுங்கள்… ஆனால் கனவு என்பது நீங்கள் தூங்கும் போது வருவதல்ல உங்களை தூங்க விடாமல் செய்வதே கனவு என்ற குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் வார்த்தைகளுக்கு ஏற்பத் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஞானாக்னி அறக்கட்டளை மாணவர்களுக்கான விழாவை நடத்தி வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அப்துல்கலாம் சொன்ன கனவை காண வைப்பதற்கும், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கும் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடப்பாண்டு சென்னை வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மகாலில் நடைபெற்ற இவ்விழாவில் ஞானாக்னி அறக்கட்டளை தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ பிரகாஷ் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி, பேச்சுப்போட்டி, கட்டூரைப் போட்டி, கவிதைப் போட்டி தெரு நாடகம் மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாம் 2047 நிகழ்ச்சி தங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்திருப்பதாக நடனப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தனர்.

அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் மின்சாரம் தொடர்பாகவும், பனித்துளியில் இருந்து தண்ணீரை தனியாகப் பிரிப்பது குறித்தும் தங்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தினர். அதிலும் பார்வையற்றவர்கள் விபத்தில் சிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ள கிளாரா ஸ்டிக் கண்டுபிடிப்புப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இது தவிர்த்துக் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் தமிழகம் முழுவதிலுமிருந்து வருகை தந்திருந்த மாணவ, மாணவியர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். போட்டியில் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய 100 மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன அப்துல்கலாம் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் அறிவியல் பூர்வீகமாகவும், கலை மூலமாகவும் இது போன்ற போட்டிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அறக்கட்டளைக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் உட்பட அனைவரும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Tags: Kalam 2047 program: Students who displayed unique talentsகலாம் 2047 நிகழ்ச்சிமாணவர்கள்
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் அறிவாலய அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

விஜயகாந்த் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies