கலாம் 2047 நிகழ்ச்சி : தனித் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்!
Jul 25, 2026, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கலாம் 2047 நிகழ்ச்சி : தனித் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 25, 2025, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் சென்னை வானகரத்தில் ஞானாக்னி அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு போட்டிகளின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களின் திறமையை வெளிபடுத்த உதவிய கலாம் 2047 நிகழ்ச்சி குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கனவு காணுங்கள்… ஆனால் கனவு என்பது நீங்கள் தூங்கும் போது வருவதல்ல உங்களை தூங்க விடாமல் செய்வதே கனவு என்ற குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் வார்த்தைகளுக்கு ஏற்பத் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஞானாக்னி அறக்கட்டளை மாணவர்களுக்கான விழாவை நடத்தி வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அப்துல்கலாம் சொன்ன கனவை காண வைப்பதற்கும், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கும் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடப்பாண்டு சென்னை வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மகாலில் நடைபெற்ற இவ்விழாவில் ஞானாக்னி அறக்கட்டளை தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராமசீனிவாசன் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ பிரகாஷ் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி, பேச்சுப்போட்டி, கட்டூரைப் போட்டி, கவிதைப் போட்டி தெரு நாடகம் மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கும் இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலாம் 2047 நிகழ்ச்சி தங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்திருப்பதாக நடனப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தனர்.

அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் மின்சாரம் தொடர்பாகவும், பனித்துளியில் இருந்து தண்ணீரை தனியாகப் பிரிப்பது குறித்தும் தங்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தினர். அதிலும் பார்வையற்றவர்கள் விபத்தில் சிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ள கிளாரா ஸ்டிக் கண்டுபிடிப்புப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இது தவிர்த்துக் கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் தமிழகம் முழுவதிலுமிருந்து வருகை தந்திருந்த மாணவ, மாணவியர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். போட்டியில் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய 100 மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன அப்துல்கலாம் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் அறிவியல் பூர்வீகமாகவும், கலை மூலமாகவும் இது போன்ற போட்டிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அறக்கட்டளைக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் உட்பட அனைவரும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Tags: மாணவர்கள்Kalam 2047 program: Students who displayed unique talentsகலாம் 2047 நிகழ்ச்சி
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் அறிவாலய அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

விஜயகாந்த் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

Load More

அண்மைச் செய்திகள்

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies