நீண்ட தூர இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணையின் முதற்கட்ட சோதனையை, ஒடிசாவில் இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, ஒடிசாவில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தீவிலிருந்து ‘குஷா’ ஏவுகணையின் முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
எதிரி நாடுகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக முறியடிக்கும் திறன் இந்த ஏவுகணைக்கு உள்ளது.
இதன் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்தும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றி பாதுகாப்புத் துறையில் முக்கிய மைல்கல் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
















