சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல்துறை துணை ஆணையர் சுமித் ஜா, இதுவரை 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை போலியான பதிவுகள் மற்றும் வதந்திகளை பரப்பியதால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த கணக்குகள் ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூர் காலத்திலும் செயல்பட்டதாகவும், மக்களை தூண்டிவிடுவதும், குறிப்பாக மாணவர்களின் கவனத்தை திசை திருப்புவதுமே அவற்றின் நோக்கம் எனவும் கூறினார்.
போலி பதிவுகள், எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் அடையாளம் தெரியாத சமூக வலைதள கணக்குகளில் வரும் தகவல்களை பகிர்வதற்கு முன் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
அதே நேரத்தில், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை என்றும் கூறியுள்ளார்.
















