டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சீக்கியர்களுக்கும் – காரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் காவலர்கள் மீதும், பெண் செய்தியாளர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் போராட்டத்தில் பங்கேற்க வந்த சீக்கிய மதத்தினருக்கு கரப்பான் பூச்சி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சீக்கிய மதத்தினர் கையில் ஆயுதங்களை வைத்திருந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கைலகப்பு ஏற்பட்டது. இதனால் ஜந்தர் மந்தர் பகுதியில் அசாதாரண சூழல் நிலவியது.
















