ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஒடுக்கி வருவதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அப்பகுதியில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு இருக்காது என்றும் தெரிவித்தார்.
பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்து தனது பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
















