தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரவித்துள்ளார்.
தூத்துக்குடி அருணாச்சலம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் காவல்நிலைய மரணங்கள் தொடர்வதாக தெரிவித்தார்.
அருணாசலம் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
















