நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்கை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்- ஐ திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
CJP உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, நீட் விவகாரம் தொடர்பாக கலந்தாலோசித்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தெரிவித்தார்.
பின்னர், சந்திப்பு குறித்து தெரிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், தாங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளில் இரண்டை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தனர். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு இழப்பீடு மற்றும் போராட்டக்காரர்கள் மீதான எப்ஐஆர்- ஐ திரும்பப் பெற ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறினர்.
















