“நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள்” என்று, நீட் விவகாரம் தொடர்பான மாணவர் போராட்டங்கள் குறித்து ஆர்எஸ்எஸ் மூத்த தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் சிஜேபி அமைப்பினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் மூத்த தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார், நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் சக்திகளுக்கு யாரும் துணைபோகக் கூடாது என்று வலியுறுத்தினார்.
நல்லது செய்ய முடியாவிட்டாலும், நாட்டை சிதைக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார். மேலும், சில வெளிநாட்டு சக்திகள் இந்தியாவின் முன்னேற்றத்தை பாதிக்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
















