கட்சி அறிவுறுத்தலை மீறி செயல்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம், அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை, அமமுக பொருளாளர் கரிகாலன் சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரிகாலன், கட்சியின் பொதுச்செயலாளர் வழங்கிய அறிவுறுத்தலுக்கு மாறாக சட்டமன்றத்தில் காமராஜ் செயல்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற வழக்கில், ஒரு கட்சியின் தலைவர் வழங்கும் அறிவுறுத்தலை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், அதனடிப்படையில் காமராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கரிகாலன் வலியுறுத்தினார்.
















