தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள், அகலப் பாதைகள் மற்றும் இரட்டை பாதைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக 11 ஆயிரத்து 391 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், இதுவரை 2 ஆயிரத்து 910 ஏக்கர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேவைப்படும் நிலத்தில் சுமார் 26 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளதால், திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 7 ஆயிரத்து 611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தாலும், நிலம் கையகப்படுத்துதலே முக்கிய சவாலாக இருப்பதாக ரயில்வே அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















