கேரளாவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலியை என்ஐஏ அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
இந்தக் கொலைச் சதியின் முக்கிய மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் பிஎஃப்ஐ அமைப்பின் பாலக்காடு மாவட்டத் தலைவர் முகமது அலி, வழக்குப்பதிவுக்குப் பிறகு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில், சவுதி அரேபியாவிலிருந்து டெல்லி வந்த அவரை ரகசிய தகவலின் அடிப்படையில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















