ராமேஸ்வரம் பகுதியில் திடீரெனக் கடல் உள்வாங்கியதால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டின.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாகச் சுமார் 300 மீட்டருக்குத் தூரத்திற்கு திடீரெனக் கடல் உள்வாங்கியது.
இதனால், அப்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், நட்சத்திர மீன்கள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை கடலிலிருந்து வெளியில் தெரிந்தன.
மேலும், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் தரை தட்டின. கடல் உள்வாங்கிய பகுதியில் உள்ள படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.